#Brazil

இரவில் நடந்த விபத்து!! பறிபோன உயிர்கள்!!

பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள டீக்ஸீரா டி ஃப்ரீடாஸ் அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரியோ டி ஜெனிரோவில் இருந்து போர்டோ செகுரோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு பேரை கத்தியால் குத்த முயன்ற நபர்!! காவல்துறையிடம் சிக்கி கொள்வதை தவிர்க்க ஜன்னலிருந்து குதித்து மரணம்!!

பிரேசிலின் சால்வடார் நகரில் தனது காதலியையும், டாக்ஸி டிரைவரையும் கத்தியால் குத்த முயன்றதாக 30 வயதுடைய அமெரிக்க குடிமகனான Zachary Modi Mikaya மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர்கள் கூறினர். போலி ஆவணங்களை வைத்து ஹோட்டலில் தங்கி இருந்ததால் அவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் சிரமப்பட்டனர். மேலும் அவர் …

இரண்டு பேரை கத்தியால் குத்த முயன்ற நபர்!! காவல்துறையிடம் சிக்கி கொள்வதை தவிர்க்க ஜன்னலிருந்து குதித்து மரணம்!! Read More »

மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா??

தெற்கு பிரேசிலில் கிட்டத்தட்ட 1000 நீர் நாய்கள் மற்றும் கடல் சிங்கங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை இந்த பாதிப்பிலிருந்து தடுக்க இறந்த உயிரினங்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த வைரஸ் கடல் பாலூட்டிகளின் நரம்பு மண்டலத்தை தாக்குவதால், அவற்றின் வலி கொடுமையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் …

மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா?? Read More »

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் MST-க்கு சொந்தமான முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இணையதள சேவைக்கான கம்பிகளை நிறுவும் பொழுது மின்சார கம்பிகளில் short circuit ஏற்பட்டது. அதுவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் இறந்தவர்களில் ஆறு பேர் முகாமில் வசிப்பவர்கள். …

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!! Read More »