ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!

சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள மலையிலிருந்து வந்த திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டதில் விருந்தினர் தங்கும் வீடு சரிந்து மண்ணிற்குள் புதைந்தது.

18 பேர் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் 6 உயிரிழந்துள்ளதாக தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதங்களாகவே சீனா இயற்கை பேரழிவு சம்பவங்களை சந்தித்து வருகிறது.

வட,தென்மேற்கு சீனாவில் வெள்ளத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இது இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை.