குழந்தையின் உயிரைப் பறித்த sticky rice!! உடலை ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கொடுமை!! என்ன நடந்தது?

குழந்தையின் உயிரைப் பறித்த sticky rice!! உடலை ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கொடுமை!! என்ன நடந்தது?

தாய்லாந்தில் இரண்டு வயது சிறுவனின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்ததாக ஒரு தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த குழந்தையின் பெற்றோர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதால் இந்த தம்பதியினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் மூச்சுத் திணறலால் சிறுவன் இறந்துவிட்டதாக தம்பதியினர் தெரிவித்தனர்.

ஒரு நாள் அந்த குழந்தை அசைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி குளிர்சாதன பெட்டியில் அடைத்தனர்.

அந்த தம்பதியினர் வீட்டில் இருந்த ஒரு மூதாட்டி துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதனை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் தொண்டையில் sticky rice சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக குழந்தை இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இருப்பினும் இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக அந்த குழந்தையின் அத்தை கூறினார்.

மேலும் குழந்தையின் உடலில் இருந்த ஏராளமான காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.