தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 வயதான பேட்ஸ்மேன் தோனியிடமிருந்து ஒரு சோதனையை எதிர்கொள்கிறது.
மூன்று ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை சிஎஸ்கே சந்தித்துள்ளது.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தோனி குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சிஎஸ்கே விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோனி ஒரு பேட்ஸ்மேனாக விளையாடியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில், தோனி ஏன் முன்னதாக வந்து விளையாடவில்லை என்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
அப்போது ஆடுகளம் குறித்து ஃப்ளெமிங் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் 16வது ஓவரில் தோனி பேட்டிங் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் முழங்கால் முன்பு இருந்தது போல் இல்லை. அவரால் சாதாரணமாக விளையாட முடியவில்லை.ஆனால் அவரது முழங்காலில் உள்ள பிரச்சனை நீண்ட காலமாகவே உள்ளது. ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் நேரத்தைப் பொறுத்து அவர் பேட்டிங் செய்ய வருவார்.அவர்தான் அந்த முடிவை எடுக்கிறார். ஆட்டம் சமநிலையில் முடிந்தால், அவர் சீக்கிரமே பேட்டிங் செய்ய வருவார். இல்லையென்றால், அவர் அணியில் உள்ள மற்ற வீரர்களை நம்புவார்.
கடந்த சீசனில் நான் சொன்னேன். அவர் எங்களுக்கு மதிப்புமிக்க வீரர். விக்கெட் கீப்பிங் மற்றும் தலைமைத்துவத்தில் அவர் எங்களுக்கு நிறைய உதவுகிறார். அவர் 13-14 ஓவர்கள் மட்டுமே விளையாடுவார். அதற்கு முன் பேட்டிங் செய்வது கடினம் என்று ஃப்ளெமிங் கூறினார்.
பின்ச் ஹிட்டராக தோனியை பார்க்கிறது சிஎஸ்கே அணி. அதுவும் ஆட்டத்தின் சூழலை பொறுத்தே அவர் களம் காண்கிறார். இப்போது அது அணிக்கு சோதனையாக அமைந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 9 வது பேட்ஸ்மேனாக எம்.எஸ். தோனி களமிறங்கியது ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan