ஸ்ரீதேவியின் மகள் செய்த லீலை!!தந்தை வந்ததும் தப்பித்து ஓட்டம் பிடித்த பையன்!!

ஸ்ரீதேவியின் மகள் செய்த லீலை!!தந்தை வந்ததும் தப்பித்து ஓட்டம் பிடித்த பையன்!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் ஒரு பேட்டியில் தன் அறையில் ஒரு பையனை ஒழித்து வைத்ததாகவும், திடீரென தன் தந்தை அறைக்கு வந்ததால் அவரை மாடியில் இருந்து கீழே குதிக்க சொன்னதாகவும் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவி, தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர்.1969இல் குழந்தை நட்சத்திரமாக துணைவன் திரைப்படத்தில் முருகன் வேடத்தில் அறிமுகமானார். தமிழில் கதாநாயகியாக இவரது அறிமுகமானது பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படம் ஆகும். தமிழில் கமல் ஹாசன் உடன் இவர் நடித்த 16 வயதினிலே திரைப்படத்தில் ‘மயிலு ‘என்ற கதாபாத்திரம் இவருக்கு தனி அடையாளத்தையே ஏற்படுத்தியது. தொடர்ந்து இவர் கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அடிக்க ஆரம்பித்தார். இவர் கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும், நான்கு முறை ஃபிலிம் ஃபேர் விருதினையும் பெற்றார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்கினை பாராட்டும் வகையில் இவருக்கு 2013ல் பத்மஸ்ரீ விருதானது வழங்கப்பட்டது.

இந்நிலையில் 1996 இல் ஸ்ரீதேவிக்கும் இந்தி திரைப்பட இயக்குனருமான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதேவி 2018ல் துபாயில் பிரபல ஹோட்டல் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்து கிடந்தார்.

தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி சினிமாவில் இளம் நடிகையாக கலக்கிக் கொண்டு வருகிறார்.தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.கொரட்டாலா சிவா இயக்கத்தில் ‘தேவார ‘படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட’ மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி ‘திரைப்படம் வரும் மே மாதம் 31 இல் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகளில் ஜான்வி கபூர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மஷபில் இந்தியா யுடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.மும்பை வீட்டில் நாங்கள் இருந்தபோது தனது அறையில் ஒரு பையனுடன் இருந்ததாகவும் அப்போது தன் தந்தை வந்ததால் அவரை முதல் மாடியில் இருந்து தன் கார் லெக்ஸஸில் குதிக்கச் சொன்னதாகவும் கூறியிருந்தார். இக்காட்சிகளை தனது தந்தை சி சி டிவியில் பார்த்துவிட்டு மறுநாள் காலை ஜன்னலுக்கு க்ரிலை கொண்டு மூடச் சொன்னதாகவும் கூறினார்.

தன் தந்தையை பற்றி பேசியபோது, அம்மாவை பார்ப்பதற்காக அப்பா ஹோட்டல் ஜன்னல் வழியாக குதித்துச் சென்றதாக அடிக்கடி கூறுவார். ஒவ்வொரு நாள் இரவும் 10 மணிக்கு பழைய பாடல்களை கேட்டுக்கொண்டு பழைய நாட்கள் மற்றும் நினைவுகளைப் பற்றி பேசுவது அவருக்கு பிடிக்கும் என்றும். இரவு மியூசிக் சேனல்களில் பாடல் கேட்கும்பொழுது உனக்குத் தெரியும் ..நானும் உன் அம்மாவும்… என்று பேசுவது அவருக்கு பிடித்த விஷயம் என்றும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.