யானைகளால் மிதித்து கொல்லப்பட்ட ஸ்பெயின் நாட்டவர்!!

யானைகளால் மிதித்து கொல்லப்பட்ட ஸ்பெயின் நாட்டவர்!!

ஜூலை 7 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள Pilanesberg தேசிய பூங்காவைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 43 வயதுடைய சுற்றுலா பயணியை யானைகள் மிதித்து கொன்றது.

சம்பவம் நடந்த தினத்தன்று காலை அவர் தனது வருங்கால மனைவி மற்றும் இரண்டு பெண்கள் ஆகியோருடன் பூங்காவைச் சுற்றிப் பார்க்க சென்றார்.அங்கு யானைக் கூட்டத்தை அவர்கள் கண்டனர்.

அவர் வாகனத்திலிருந்து இறங்கி யானைகள் கூட்டத்தை புகைப்படம் எடுக்க நினைத்தார்.

புகைப்படம் எடுப்பதற்காக அருகே சென்ற போது அவரை யானைகள் மிதித்து கொன்றதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்தது.

அங்கு மூன்று யானைகள் மற்றும் மூன்று யானை குட்டிகள் இருந்தன.

அவருடன் இருந்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

யானைகள் அதன் குட்டிகளை பாதுகாப்பது இயல்பு.

பூங்காக்களுக்கு வருகை அளிக்கும் பல சுற்றுலா பயணிகளுக்கு விலங்குகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது தெரியவில்லை என தேசியப் பூங்காவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.