இந்தியாவுக்கு சுற்றுலாவிற்காக வந்த ஸ்பெயின் தம்பதியினர்!! கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!!

இந்தியாவுக்கு சுற்றுலாவிற்காக வந்த ஸ்பெயின் தம்பதியினர்!! கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து விட்டு இரவு தும்கா மாவட்டத்தில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிலர் அவர்களை தாக்கி அந்த பெண்ணை கூட்டுபலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் மார்ச் 2ஆம் தேதியன்று நடந்தது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் சிலரை வலை வீசி தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.