Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற “சொற்சிலம்பம் 2023´´

சிங்கப்பூரில் நேற்று சொற்சிலம்பம் விவாத போட்டி நடைபெற்றது. இப்போட்டி மீடியாகார்ப் வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டி 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியை சிங்கப்பூரில் உள்ள தொடக்கக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.

நேற்று நடந்த இறுதி சுற்றில் ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளியும், யூனோய தொடக்க கல்லூரியும் போட்டியிட்டது.

ஆங்கிலோ சீனத் தன்னாட்சி பள்ளி “கோவிட்-19 கிருமிப் பரவல் சிங்கப்பூரர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது´´ என்ற தலைப்பை பற்றி பேசியது.

யூனோய தொடக்கக் கல்லூரி அந்தத் தலைப்பை மறுத்து விவாதித்தது.

நடந்த இப்போட்டியில் யூனோய தொடக்கக் கல்லூரி வெற்றி பெற்றது.

இப்போட்டி கிருமி பரவல் காரணமாக 2020 முதல் 2022 -ஆம் ஆண்டு வரை நடைபெறவில்லை.

இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம் நாயர் கலந்து கொண்டார்.