கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!!

கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!!

மலேசியாவில் 55 வயது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்துக் கொன்ற 33 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கேம்பங் ஜாவாவில் உள்ள அவரது வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த நபர் தாயை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த நபர் மீது போதைப் பொருள் தொடர்பான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படி வழங்கப்படலாம்.