சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க இப்படி ஓர் முயற்சியா?

சிங்கப்பூரில் தீவு முழுவதும் தோட்டக்கலையை ஊக்குவிபதற்காக 170 க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மொத்தம் 13 தோட்டங்களில் அமைந்துள்ளன.

அக்டோபர் 8-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

தனிநபர்கள் தோட்டங்களில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் காய்கனிகளை வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நல்ல தோட்டக்கலை நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட இடங்கள் மாற்றப்படலாம்.

தற்போது வரை தீவு முழுவதும் உள்ள 28 பூங்காக்களில் 2400 க்கும் மேற்பட்ட இடங்கள் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.