சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மூத்த ஓவியர் திரு.லிம் சே பெங் காலமானார்.
அவருக்கு வயது 103.
1950களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஓவியம் வரையத் தொடங்கினார்.
2003ஆம் ஆண்டு இவரது ஓவியத்திற்கு கலாசாரப் பதக்கம் கிடைத்தது.
அவரது ஓவியங்கள் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவை சமகாலத்தவை என்றும் கூறப்படுகிறது.
அவரது மறைவுக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லிம்மை “சிங்கப்பூரில் உள்ள குறிப்பிடத்தக்க ஓவியர்களில் ஒருவர்” என்று பதிவிட்டுள்ளார்.
பழைய சிங்கப்பூரின் நினைவுகளை சித்தரிக்கும் ஓவியங்களால் புகழ்பெற்ற திரு.லிம், நாட்டின் வளர்ச்சியை தனது ஓவியங்களில் பதிவு செய்தவர் என்று பிரதமர் கூறினார்.
சிங்கப்பூரின் கலாச்சாரப் பதிவுகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் அவரைப் பாராட்டினார்.
அவர் தனது இறுதி நாட்கள் வரை தினமும் ஓவியம் வரைந்தார். இதன் மூலம் அவர் ஓவியத்தின் மீது கொண்டிருந்த பற்றை அறிய முடிகிறது.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் கலை மற்றும் தேசிய அடையாளத்திற்காக திரு.லிம் ஆற்றிய பங்களிப்பிற்காக பேஸ்புக்கில் நன்றி தெரிவித்தார்.
திரு.லிம் கடந்த 80 ஆண்டுகளில் வரைந்த ஓவியங்கள் மார்ச் 23ஆம் தேதி வரை சிங்கப்பூர் நேஷனல் கேலரியில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan