நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!!

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!!

அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்தை
அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

அவர் வாழ்த்து செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.

குவே சாலாட் (Kuih Salat) தனக்கு மிகவும் பிடித்த பலகாரம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதில் இனிப்பு குறைவு என்று கூறினார்.

திரு.தர்மன் குவே சாலாட்டின் படம் மற்றும் அதை அவருக்கு தயாரித்து கொடுத்த திரு.சமாடி அப்துல் கனியின் படம் ஆகியவற்றையும் அவர் பகிர்ந்தார்.

“திரு.சமாடி ஆசிரியர் தொழிலைவிட்டு மலாய் பலகாரங்களின் மரபுடைமையை காக்கும் நோக்கத்துடன் புக்கிட் பாத்தோக்கில் கடை திறந்திருக்கிறார்.கடின உழைப்பு என்றாலும் இது அன்பின் உழைப்பு” என்று அதிபர் கூறினார்.

புக்கிட் பாத்தோக்கில் உள்ள குவே சாலாட் வித்தியாசமானது என்று கூறினார்.அது வெள்ளைக் கவுனி அரிசிக்கு பதிலாக கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கப்படுகிறது என்று கூறினார்.