சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணி புரிந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 88,400 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினர் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டது.

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் நிதி மற்றும் தொழில்முறை சேவைத் துறைகளில் சேர்ந்துள்ளதாக கூறியது.

கடந்த 2023 -ஆம் ஆண்டின் பணி நீக்கங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட ஒரு மடங்கு உயர்ந்தது.

எனினும்,இது நோய்த் தொற்றுக்கு முந்தைய காலத்திற்கு ஈடாக இருந்ததாக கூறியது.

வணிக சூழல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும்,அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தவும் முதலாளிகள் திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.