சிங்கப்பூர் – குவாங்சோ நோக்கிச் சென்று கொண்டிருந்த Scoot விமானம் குலுங்கியதில் 7 பேர் காயம்…!!!

சிங்கப்பூர் - குவாங்சோ நோக்கிச் சென்று கொண்டிருந்த Scoot விமானம் குலுங்கியதில் 7 பேர் காயம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து நேற்று (செப்டம்பர் 6) காலை சீனாவின் குவாங்சோவுக்கு விமானம் சென்று கொண்டிருந்தபோது கடும் நடுக்கம் ஏற்பட்டது.

இதனால் ஸ்கூட் விமானம் TR100 நடுவானில் குலுங்கியதில் 7 பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட விமானம் குவாங்சோவில் காலை 9.10 மணிக்கு தரையிறங்கியது.

போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணிக்கு சீரற்ற முறையில் தரை இறங்கியதில் பயணிகள் 7 பேர் காயமடைந்தனர்.

ஸ்கூட் நிறுவனம் காயமடைந்த 4 பயணிகள் மற்றும் 3 விமான பணியாளர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளித்தது.

நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி காயமடைந்தவர்களில் ஒருவர் மட்டும் கூடுதல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்குவதாக ஸ்கூட் தெரிவித்துள்ளது.

Follow us on : click here ⬇️