2026 முதல் சாலை போக்குவரத்து நடைமுறைகளை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!!

2026 முதல் சாலை போக்குவரத்து நடைமுறைகளை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடுத்த ஆண்டு (2026) முதல் அதிக அபராதம் மற்றும் குற்றப் புள்ளிகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொங் பாங்கில் சாலைப் பாதுகாப்பு தினத்தைத் தொடங்கிவைத்து பேசிய உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா.சண்முகம் இந்தத் தகவலை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மட்டும் வேக விதிமீறலால் 7,200 விபத்துகள் நடந்துள்ளன.இதில் 142 பேர் உயிரிழந்தனர். 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு (2024) சுமார் 192,000 வேக விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சமுதாயத்தை உருவாக்குவது அவசியம் என்றும், மக்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்