சிங்கப்பூர் : உடற்குறையுள்ள ஓவியர்களுக்கு நிதி ஆதரவு!!

சிங்கப்பூரின் மிகப்பெரிய கலை விழாவான Shaping Hearts 2024 இல் உடல் ஊனமுற்ற ஓவியர்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.அந்த ஒப்பந்தம் 2029-ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.

உடல் ஊனமுற்ற ஓவியர்களுக்கு ஆதரவாக ஒரு மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் 200 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் 500 கைவண்ணப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அற்புதமான படைப்புகளை உருவாக்குவதில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பல சவால்கள் உள்ளன.

அவற்றையெல்லாம் கடந்து சாதனை படைத்தவர்களின் கடின உழைப்பு நிகழ்ச்சியின் பாராட்டப்பட்டது.

Shaping Hearts பொது இடங்களில் கலைகள் மூலம் உள்ளடக்கிய திட்டங்களை வழி நடத்தும்.