மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்...!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பௌத்த சங்கம் S$200,000 நன்கொடை அளித்துள்ளது.
சிங்கப்பூர் பௌத்த சங்கம் பணத்தை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே கடந்த 28 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அப்பகுதியில் அழிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கிட முடியாத நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் மக்கள் தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவைப்படும் என்று கணித்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan