சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(SIA) குழுமம் தனது விமானங்களுக்கு நிலையான எரிபொருளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் எரிவாயு வழக்கமாக பயன்படுத்தப்படும் எரிவாயுடன் கலக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் Aether Fuels நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு நிலையான எரிவாயுவை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அது SIA,Scoot விமானங்கள் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட
விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும்.

கரிமக் கழிவுகளைக் கொண்டு எரிவாயுவை Aether Fuels நிறுவனம் தயாரிக்கிறது.

இவ்வாறு செய்வதால் உற்பத்திக்கான செலவு குறையும்,எரிவாயுவை அதிகளவு தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

2050 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைப்பதே சிங்கப்பூரின் இலக்கு .அந்த இலக்கை அடைய இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று SIA குழுமம் கூறியது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan