சிங்கப்பூர் : தன்னை அலட்சியபடுத்தி சென்ற பெண்ணை பழி வாங்கும் நோக்கில் மயக்க மருந்தை கலந்த சுற்றுலா பயணி!!

சிங்கப்பூர் : தன்னை அலட்சியபடுத்தி சென்ற பெண்ணை பழி வாங்கும் நோக்கில் மயக்க மருந்தை கலந்த சுற்றுலா பயணி!

சிங்கப்பூரில் உள்ள Trifecta பூங்காவில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த Kim Donghun (33) என்ற சுற்றுலாப் பயணி ஒரு பெண்ணின் பானத்தில் Tadalafi எனும் ஒருவகை மருந்ததை கலந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது.இந்த பூங்கா சாமர்செட்டில் அமைந்துள்ளது.

அவர் அங்கு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். நண்பர்களுடன் அங்கிருந்த பெண்ணையும் அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அவர் எடுத்த புகைப்படங்களை அந்த பெண்ணிடம் காட்டினார்.

அதனை அலட்சியபடுத்தி விட்டு அந்த பெண் அங்கிருந்து சென்றார் . அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பழி வாங்க நினைத்தார் .

அந்த பெண் குடித்து மீதம் வைத்திருந்த பானத்தில் உடலுறுப்பை செயலிழக்க கூடிய மருந்தை கலந்தார்.அதனை குடித்த அந்த பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டது.தனது பானத்தில் ஏதோ ஒன்று கலந்திருப்பதை உணர்ந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தனது குற்றத்தை கிம் ஒப்புக்கொண்டார்.நீதிமன்றத்தில் கிம்முக்கு 4 மாதச் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.