சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து!!

பொங்கோலில் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியின் பிளாக் 501A இல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து அதிகாலை 2.25 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது. இந்த தகவலை 8 World செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.

விடுதியில் இருந்த குப்பைத் தொட்டியில் தீப்பிடித்ததாக 8 World செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.