சிங்கப்பூர் : தனது காதலி தன்னை ஏமாற்று விட்டதாக சந்தேகப்பட்டு ஆசிட் ஊற்றி,கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 62 வயது நபர்!!

சிங்கப்பூர் : தனது காதலி தன்னை ஏமாற்று விட்டதாக சந்தேகப்பட்டு ஆசிட் ஊற்றி,கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 62 வயது நபர்!!

சிங்கப்பூரில் காதலியை கொலை செய்ய முயன்ற நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது ஆசிட் ஊற்றி, பிறகு parang எனும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

காதலி தன்னை ஏமாற்றி விட்டதாக சந்தேகப்பட்டு அவர் அவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

காதலியுடன் சேர்ந்து இறக்க நினைத்து அந்த நபரும் 20 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த பெண்மணி கிட்டத்தட்ட 309 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக அவர்கள் கூறினர்.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதற்காக அவர் வருந்துவதாகவும் தெரிவித்தனர்.