சிங்கப்பூர்: தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது சூடான எண்ணெயை ஊற்றிய 21 வயது பெண்!!

சிங்கப்பூர் : தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது சூடான எண்ணெயை ஊற்றிய 21 வயதுடைய பெண்!!

சிங்கப்பூரில், தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது சூடான எண்ணெயை ஊற்றிய 21 வயதான பெண்ணுக்கு 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

25 வயதான அந்த நபருக்கு கழுத்து மற்றும் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அவர்களின் தாயார் காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

இதனை அடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.