“சிறக்கடிக்க ஆசை” சீரியல் நடிகை ஸ்ருதியின் ஓபன் டாக்!!

"சிறக்கடிக்க ஆசை" சீரியல் நடிகை ஸ்ருதியின் ஓபன் டாக்!!

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்த ஸ்ருதி…

வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் ரசிகர்களை அதிகம் கவர்கிறது.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் ‘சிறகடிக்க ஆசை’ இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த சிறகடிக்க ஆசைத் தொடர் டிஆர்பியிலும் முதலிடத்தில் உள்ளது. இதில் ஹீரோ ஹீரோயினை விட ஸ்ருதியாக நடிக்கும் ப்ரீத்திதான் அதிகம் பேசப்படும் கேரக்டர்.

இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடத்தில் உள்ளது.இந்த கால படித்த பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதைப்போல் மனதில் பட்டதை அப்படியே பேசும் கேரக்டர் தான் ஸ்ருதி. இதனாலேயே அவருக்கு மிகுந்த ரசிகர்கள் உண்டு. அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், சீரியலில் நுழைவதற்கு தான் சந்தித்த சிரமங்கள் குறித்து பேசியுள்ளார். வழக்கம் போல், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் போது, எல்லார் வீட்டிலும் இருக்கும் அந்த எதிர்ப்பு ப்ரீத்தியின் வீட்டிலும் இருந்ததாம்.

இருந்தாலும் மகள் ஏதோ செய்வது போல் விட்டுவிட்டார்கள். யாருடைய ஆதரவும் இல்லாமல் பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாகவும், இறுதியாக இந்த வாய்ப்பு வந்ததாகவும் பேட்டியில் ப்ரீத்தி கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஒருவர் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி என்னிடம் கேட்டார். நான் இல்லை என்று கூறிவிட்டேன்.ஆனால் அட்ஜஸ்ட் செய்யாமல் நீ சினிமாவில் என்ன கிழிக்கப் போற என்று அந்த நபர் கேவலமாக பேசினாராம்.

இது குறித்து பேசும் போது ப்ரீத்தியை பேட்டி எடுத்த தொகுப்பாளர், அப்படி கேட்டவரிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ப்ரீத்தி, நான் எப்படி அமர்ந்திருக்கிறேன் என்று வந்து பாருங்கள் என்று கூறுவேன். இதுதான் நான் அவருக்கு கொடுக்கும் சிறந்த பதிலாக இருக்கும்.இப்போது நான் பெற்றுள்ள வரவேற்பு, மக்களிடம் நான் பிடித்த இடம் இதுவே அவருக்கு ஒரு சிறந்த பதிலடி என்று கூறினார்.

அட்ஜஸ்ட் பண்ணாமல் சினிமாவில் எப்படி வர முடியும் என்று அன்று கேட்டார். ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் சினிமாவில் சாதிக்கலாம் என்பதற்கு நானும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

இருப்பினும், அந்த நபர் என்னை சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறார். என்னைப் பற்றி இப்போது தெரியும். அவருக்கு எனது பதில் இதுதான். ஆனால், அந்த நபரை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதனால் அவரை பிளாக் செய்து விட்டேன் என்று கூறினார்.