துப்பாக்கி சூடு சம்பவம்!!மியான்மர் எல்லைக்கு அருகே ராணுவத்துக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல்!!

டிசம்பர் 16ஆம் தேதி அன்று மியான்மர் எல்லைக்கு அருகில் தாய்லாந்து ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடத்தல்காரர்களிடம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக amphetamine மாத்திரைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை இன்னும் உறுதி செய்யவில்லை என்று அவர்கள் கூறினர்.

தாய்லாந்தின் எல்லையான மியான்மரில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.