டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த படுகொலை முயற்சி சம்பவத்தைக் கேட்ட அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் பாதுகாப்புடன் இருப்பதும், காயத்திலிருந்து குணமடைந்து வருவதும் மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அவர் கூறினார்.

சமூகம் ஒரு போதும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என்று திரு. வோங் கூறினார்.

துப்பாக்கி தோட்டா டிரம்ப்பின் காதை துளைத்து பேரணி யில் அவர் பின்னால் இருந்த நபர் மீது பாய்ந்தது. அந்த நபர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் காதில் காயமடைந்துள்ள டிரம்ப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கி தாக்குதலில் இறந்தவரின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது அனுதாபத்தை திரு. வோங் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதாக 20 வயதுடைய Thomas Matthew Crooks அடையாளம் காணப்பட்டு சுட்டு கொல்லப்பட்டார்.