அதிர்ச்சி…!!!பனிக்கரடி தாக்கிய சம்பவம்…!!

அதிர்ச்சி...!!!பனிக்கரடி தாக்கிய சம்பவம்...!!

கனடாவின் வடக்கு நுனவுட் பகுதியில் இரண்டு பனிக்கரடிகள் தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் தளவாட நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு பனிக்கரடிகள் ஊழியரைத் தாக்கியபோது மற்ற ஊழியர்களும் அவருக்கு உதவ முயன்றுள்ளனர்.

பனிக்கரடியின் தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை காப்பாற்ற எண்ணிய சக ஊழியர்கள் பனிக்கரடியை தாக்கினர். அதில் ஒரு பனிக்கரடி உயிரிழந்தது.

பனிக்கரடிகள் மனிதர்களை அரிதாகவே தாக்கும் இயல்புடையது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் இதுபோன்று பனிக்கரடிதாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்த பெண்ணும் அவரது ஒரு வயது மகனும் பனிக்கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Follow us on : click here ⬇️