அதிர்ச்சி….!! விமான என்ஜினுக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் பலி!!

அதிர்ச்சி....!! விமான என்ஜினுக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் பலி!!

ஈரானில் ஒரு விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் விமான இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சபஹர் கொனரக் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வரேஷ் ஏர்லைன் விமானத்தை அவர் பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த தகவலை JACDEC எனும் விமான பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

போயிங் 737-500 விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு சாதனத்தை விட்டுச் சென்றதை ஊழியர் உணர்ந்தார்.

அவர் அதை எடுக்க திரும்பிச் சென்றபோது, இயங்கிக் கொண்டிருந்த என்ஜின் அவரை உள்ளே வேகமாக இழுத்தது.

அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அந்தப் பகுதிக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த போயிங் 737 எஞ்சினுக்குள் ஊழியர் இழுக்கப்பட்டதும் என்ஜின் தீப்பிடித்ததாக Bild செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர் ஊழியரின் உடல் மீட்கப்பட்டது. அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஈரான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்க விபத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.