அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!!

அதிர்ச்சி...!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்...!!

நேபாளத்தில் இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

பேருந்தில் சுமார் 43 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் உள்ள பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.

பொக்காரா முதல் காத்மாண்டு வரையிலான பாதை இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.

பேருந்து தனஹுன் மாவட்டத்தில் உள்ள மா்சயங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு நேபாள ராணுவ ஹெலிகாப்டரில் மருத்துவக் குழு அனுப்பப்பட்டது.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

நேபாளத்தில் மோசமான சாலை பராமரிப்பு, குறுகிய மலைப்பாதைகள் போன்றவற்றால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

Follow us on : click here ⬇️