பரபரப்பு ..பெண்ணின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த இளைஞர்!!

பரபரப்பு ..பெண்ணின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த இளைஞர்...

சிங்கப்பூர்: ஹவ்காங் பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்ததாக சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடந்து வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஹவ்காங் அவென்யூ 7, பிளாக் 43 இல் உள்ள தனது வீட்டில் அந்தப் பெண் இறந்து கிடந்தார். இறந்த 4 நாட்களுக்கு பிறகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஜேசன் ஹாங் என்ற 33 வயது நபர் போலீசாருக்கு இறப்பு குறித்து தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

மேலும் சடலத்தை கண்டுபிடிக்க விடாமல் தடுத்ததாக ஹொங் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கும் பெண்ணுக்கும் இடையே என்ன தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது குறித்து போலீஸ்சார் ஜேசன் ஹாங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் ஹாங்கிற்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் ஹாங் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்.

ஜேசன் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.