ஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல்!!

ஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல்!!

ஏமனின் ஹெவுதி கிளர்ச்சிக் குழு அடிக்கடி செங்கடலில் அத்துமீறி வருகிறது.

அந்தக் கிளர்ச்சி குழுவானது செங்கடலில் நடத்திய சமீபத்திய தாக்குதல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

கீரீஸூக்கு சொந்தமான டியூட்டர் கப்பலில் இரண்டு பெரிய வெடிப்புகளை அந்த வீடியோ காட்டுகிறது. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கப்பல் நீரில் மூழ்கியது.

இதுஹெவுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட 2வது கப்பல் இதுவாகும்.

ஒரு வாரத்திற்கு முன்பு,ஹெவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா படகில் வெடிகுண்டு வைத்து டியூட்டர் கப்பல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ் மாலுமி ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி தெரிவித்தார். இருப்பினும், பிலிப்பைன்ஸ் இன்னும் தகவலை உறுதிப்படுத்தவில்லை

செங்கடலில் குறிப்பிட்ட கப்பல்களை குறிவைத்து ஹெவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை 60க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவங்களில் நான்கு பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்தது.

இந்த குழு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது பிரிட்டனுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது.

மேலும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களுக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.