சிங்கப்பூரில் இரண்டாவது விமான நிலைய தளவாடப் பூங்கா!!

சிங்கப்பூரின் முதல் விநியோகக் கட்டமைப்பு இணைப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் வர்த்தக,தொழில் அமைச்சர் Gan Kim Yong கலந்து கொண்டார்.

அப்போது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.சிங்கப்பூரின் தளவாடத் துறை அதன் திறனை அதிகரிக்க உள்ளது.

அதற்காக இரண்டாவது விமான நிலைய தளவாடப் பூங்கா 2030-ஆம் ஆண்டுகளிலிருந்து திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்த புதிய தளவாடப் பூங்காவில் விநியோகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.மேலும் பல வட்டார விநியோக நிறுவனங்கள் இருக்கும்.

தடையற்ற வர்த்தக வட்டாரமாக பூங்காவை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.