Latest Sports News Online

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு!

வெள்ளைச்சாமி என்பவர் அவருக்கு வயது 48. அவர் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி ஊரைச் சேர்ந்தவர்.

வெள்ளைச்சாமி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றிருந்தார்.சிங்கப்பூரில் 3 ஆண்டுகள் வேலைச் செய்து விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.

அவருடைய மனைவி சுபஸ்ரீ,5 வயது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகை கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.

வெள்ளைச்சாமியை ஏர்போர்ட்டிலிருந்து கார் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

கீரனுர் பகுதியில் அவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்டப்பின், வெள்ளைச்சாமி காரில் ஏற தயாராக இருந்தார். அப்போது அங்கு கார் ஒன்று வந்தது.

அந்த காரில் வந்த நான்கு பேரில் இருவர் பட்டாக்கத்தியைக் கொண்டு வெள்ளைச்சாமியை வெட்டினர்.

இதில் அவருக்கு வயிற்று பகுதி மற்றும் தலைப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது.அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து உடனடியாக காரில் தப்பிச் சென்றனர்.

காவல்துறையில் வழக்குப் பதியப்பட்டது.போலீசார் வெட்டிய கும்பலைத் தேட ஆரம்பித்தனர்.

தேடுதல் வேட்டையில் இரு கூலிப்படை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.அழகு பாண்டி (26),மதன்ராஜ் (20) ஆகியோர் இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. எதற்காக இந்த தாக்குதல்? யார் கூறி அவர்கள் இதைச் செய்தனர்? என்ற கேள்விகளுடன் விசாரணை நடத்தி வருகின்றது.