நூதன மோசடி!! இணைய விற்பனை நிறுவனத்தை தொடர்ந்து ஏமாற்றி வந்த நபர்!!

நூதன மோசடி!! இணைய விற்பனை நிறுவனத்தை தொடர்ந்து ஏமாற்றி வந்த நபர்!!

சிங்கப்பூரில் இணைய விற்பனை நிறுவனம் ஒன்றை ஏமாற்றியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 26 வயதுடைய நபரை காவல்துறை கைது செய்தது.

அந்த நபர் சுமார் $52000 வெள்ளிக்கும் மேல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது .

இணையதளத்தில் அந்த நபர் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார் .தான் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் வந்ததாகவும்,செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து அனுப்பிய பொருட்களை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பி நிறுவனமும் அவரின் பணத்தை திருப்பி கொடுத்தது. நிறுவனம் அந்த பொருட்களைத் திரும்ப பெற்றது. ஆனால், நிறுவனம் அனுப்பிய பொருட்கள் அவையில்லை என்பது தெரிய வந்தது.

அந்த நபர் அதே பொருட்களைப் போல் உள்ள பொருட்களை நிறுவனத்திற்கு அனுப்பியதும், அவை மலிவான விலையுள்ள பொருட்கள் என்பதும் நிறுவனத்திற்கு தெரிய வந்தது.

இத்தகைய செயலால் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியது.

இதனை அடுத்து காவல்துறையிடம் நிறுவனம் புகார் அளித்தது.

அந்த நபர் உட்லண்ட்ஸ் காவல்துறையால் ஜூலை 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது $13,000 வெள்ளி மதிப்பிலான கணினி சமந்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர் மீது நீதிமன்றத்தில் இன்று(ஆகஸ்ட் 2) குற்றம் சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

அவர் இத்தகைய செயலைத் தொடர்ந்து செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 👇👇

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg