சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை..!! போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு…!!

சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை..!! போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தின நீண்ட வார இறுதியில் 540,000 பயணிகள் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்ததாக ஆணையம் கூறியது.

காரில் பயணம் செய்பவர்கள் 3 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே விடுமுறை நாட்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா எல்லை கடப்புகள் பரபரப்பாக இருப்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

எனவே பயணிகள் சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து ICA அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டது.

Follow us on : click here ⬇️