சிங்கப்பூரில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை!! ஏன்? எதற்காக?

சிங்கப்பூரில் 12 வயது சிறுவனை காயப்படுத்திய பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு ஏழு வாரங்கள் சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு S$138 இழப்பீடாக வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையில் அந்த சிறுவன் பள்ளி பேருந்தில் பானத்தை ஊற்றி அசுத்தம் செய்ததாலும், சீட் பெல்ட் அணியாததாலும் தான் கோபமடைந்ததாக ஓட்டுநர் கூறினார்.

அவர் சிறுவனை பேருந்தில் இருந்து இறங்குமாறு வலியுறுத்தினார்.

ஆனால் சிறுவன் இறங்க மறுத்து விட்டான்.அதனால் கோபமடைந்த ஓட்டுநர் அந்த சிறுவனின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துள்ளார்.

அவர் வேகமாக இழுத்ததன் விளைவாக சிறுவனின் தோள்பட்டை மூட்டு விலகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.