அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!!

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது .இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆலவயல் முரளி சுப்பையா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்தையா நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுந்தரி ராமையா, திமுக நிர்வாகி சோலை செல்வம் நகர துணைச் செயலாளர், ஆலவயல் சுவாமிநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.