காதல் மோகத்தில் கண்டபடி ஊர் சுற்றும் சுப்மன் கில்!! கேப்டன்சியை காட்டிய ரோஹித் சர்மா!!

காதல் மோகத்தில் கண்டபடி ஊர் சுற்றும் சுப்மன் கில்!! கேப்டன்சியை காட்டிய ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டவர் சுப்மன் கில். இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற நாளன்று அவர் நேரில் பார்க்க வராத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதற்காக இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் ஜூன் 15-ஆம் தேதி சனிக்கிழமை கனடாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்புவார் என தகவல் வெளிவந்துள்ளது.

அவர் ஹோட்டல் அறையில் அதிக நேரம் செலவிடுவதா கூறுகின்றனர்.பயிற்சியில் ஈடுபட்டாலும், ஆனால் அதிக நேரம் அறையிலேயே செலவிடுவதாக கூறுகின்றனர்.

இந்திய அணி விளையாடும் போட்டியை மற்ற ரிசர்வ் வீரர்களான ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மது உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திற்கு காண வரும் நிலையில், சுப்மன் கில் எந்த போட்டியையும் காண மைதானத்திற்கு வராமல் ஹோட்டலிலேயே நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண சுப்மன் கில் மைதானத்துக்குக் கூட வரவில்லை. சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் இருந்து புறப்பட்ட நிலையில், சுப்மன் கில் நாடு திரும்புவார்.சுப்மன் கில்லின் ஒழுங்கின செயல்பாடே இதற்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

டி20 உலகக் கோப்பையைக் காண சச்சின் டெண்டுல்கர் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் போட்டிகளைப் பார்த்துவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மறுபுறம் சாரா டெண்டுல்கர் தனது நண்பர்களுடன் நியூயார்க்கை சுற்றி பார்க்கிறார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதனால் சுப்மன் கில்,சாரா டெண்டுல்கருடன் தனது ஓய்வு நேரத்திலும் போட்டிகளின் போதும் ஊர் சுற்றி காதல் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே பல இடங்களில் இருவரும் ஜோடியாக வலம் வந்துள்ள தகவலும் வெளி வந்துள்ளது. நட்சத்திர வீரர் சுப்மேன் கில்லை ரோஹித் சர்மா திருப்பி அனுப்பிய கோபத்தில் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்திவிட்ட தகவலும் வெளி வந்துள்ளது.இதற்கு ரசிகர்கள் பாவம் தம்பி.. காதல் மோகத்தில் இப்படி எல்லாம் செய்து விட்டார் ..ஒருமுறை மன்னித்து விடுங்கள் ..என்று இஷ்டத்துக்கு கமெண்ட்களை அள்ளி விடுகின்றனர்.