சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை முயற்சி!! இரண்டு மணி நேரத்தில் பிடிப்பட்ட இளைஞர்!!

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை முயற்சி!! இரண்டு மணி நேரத்தில் பிடிப்பட்ட இளைஞர்!!

சிங்கப்பூரில் சோவா சூ காங்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 24 வயது நபர் கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் ஏப்ரல் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபரை பல மணி நேரங்களுக்கு பிறகு காவல்துறை கைது செய்தது.

அவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஒரு உலோக கம்பியுடன் நுழைந்ததாக காவல்துறை கூறியது.அந்த நபர் காசாளரின் கழுத்தில் கம்பியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

காசாளர் பணம் தர மறுத்ததால்அந்த நபர் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே சென்றார்அந்த நபரை அடையாளம் கண்ட காவல்துறை இரண்டு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். அவரிடம் இருந்து உலோக கம்பி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரின் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மாறும் ஏழு வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதோடு குறைந்தது ஆறு பிரம்படிகள் வழங்கப்படலாம்.