ரெட் அலர்ட் சபரிமலை

சபரிமலை பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பக்தர்கள் அந்தப் பாதையில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது முக்கியமாக நிலக்கல்லில் இருந்து பம்பை வழியில் நிலச்சரிவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை கொண்டு பேரிடர் மீட்பு பணியில் தயார் நிலையில் சபரிமலை உள்ளது.