RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!!

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி...!!!

ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனில் இதுவரை பெங்களூரு அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.எனவே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெங்களூரு அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளில் குஜராத், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளிடம் அந்த அணி தோல்வியடைந்தது.

ஆனால் ஆர்சிபி அணி வெளிமைதானங்களில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. எனவே, பெங்களூரு அணி வீரர்கள் இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெற முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட், ஜிதேஷ் சர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதேபோல், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், க்ருணால் பாண்​டி​யா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகின்றனர்.

அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 6 போட்டிகளில் தோல்வியடைந்து, 4 புள்ளிகளைப் பெற்று
புள்ளிப் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி போட்டியில், அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு பழிவாங்க ராஜஸ்தான் அணி முனைப்புடன் களமிறங்கும்.அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரெல், சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் அற்புதமாக விளையாடினர்.

மேலும் 14 வயதான வைபவ் சூர்யவன்சி லக்னோவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்சி ராஜஸ்தான் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

முதல் போட்டியிலேயே 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றார்.

அதேபோல் ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, தீக்சனா மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் நல்ல செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே இன்றைய போட்டியானது ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.