Latest Singapore News

சிங்கப்பூரில் அதிரடி சோதனை! 6 பெண்கள் கைது!

சிங்கப்பூரின் கேலாங் வட்டாரத்தில் கடந்த மே மாதம் சோதனை நடத்தப்பட்டது.43 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் சட்ட விரோத சூதாட்டம் உள்ளிட்ட பிற குற்ற செயல்கள் நடப்பதைப் பல அமலாக்க நிறுவனங்களின் கூட்டுச் சோதனை நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 2 இணைய casino சூதாட்டக் கூடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடத்தப்பட்ட இடத்தில் 3,000 வெள்ளிக்கும் அதிகமான பணமும், சூதாட்டப் பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

40,000 வெள்ளி மதிப்புள்ள இருமல் மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

6 பெண்கள் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.