நிலச் சோதனை சாவடிகளை விரைவாக கடக்க உதவும் QR குறியீடு…

நிலச் சோதனை சாவடிகளை விரைவாக கடக்க உதவும் QR குறியீடு...

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் QR குறியீடு அடிப்படையிலான பயணத்தை அறிமுகப்படுத்தியதன் பிறகு, பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகளை விரைவாக கடந்து செல்கின்றனர் என குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆணையம் இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில் “F1 கார் பார்க்கிங் போன்ற நிலச் சோதனைச் சாவடிகளை பயணிகள் விரைவாக கடக்க முடியும்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்வதால் எந்த வித்தியாசமும் இல்லை என சிலர் கூறலாம் என்று சொன்னார்.

நீண்ட நேர காத்திருப்புக்கு பதில் ஐந்து நிமிடங்கள் நம்மால் சேமிக்க முடிந்தால் அதுதான் வித்தியாசம் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் கார் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாகப் பயணம் செய்பவர்களில் 64 சதவிகிதத்தினர் QR குறியீட்டைப் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.