பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!!

இந்திய நகைக்கடை முதலாளி Mehul Choksi நேற்று கைது செய்யப்பட்டார்.அவர் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாப் தேசிய வங்கியிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.
வைர வியாபாரியான அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டு வந்தது.அந்த தகவலை பிபிசி வெளியிட்டது.
இந்தியாவை விட்டு 2018 ஆம் ஆண்டில் சோக்சி வெளியேறினார்.
இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைக்க முடிவெடுத்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார் என்றும் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைப்பது சரியல்ல என்று அவரின் வழக்கறிஞர் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan