துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனத்தின் புதிய நிலையம்!!

துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனத்தின் புதிய நிலையம்!!

துவாஸ் துறைமுகத்தில் PSA நிறுவனம் புதிய விநியோகத் தொடர் நிலையத்தை அமைக்க உள்ளது.

2027-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள துறைமுகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு குளிர்பதன கிடங்கு,ஆபத்தான பொருட்களை வைக்கும் இடம் போன்ற வசதிகள் இருக்கும்.

சிங்கப்பூரின் கடல்துறையில் போட்டித்தன்மையை வலுப்படுத்த அதிக மதிப்புள்ள பொருட்களை அங்கு கையாளலாம்.

புதிய நிலையத்துக்கான பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது இரன்டு மில்லியன் சதுர அடி பரப்பில் அமையவிருக்கிறது.

மேலும் அங்கு துறைமுகத்திற்குள் சரக்குகளை விரைவாக நகர்த்த புதிய தானியக்க வசதியும் இருக்கும்.