சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்…!!

சீனா, மெக்சிகோ,கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரியை அறிவித்த அதிபர் டிரம்ப்...!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மீது அதிகாரப்பூர்வமாக புதிய வரிகளை விதித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம், ஃபெண்டானில் என்ற போதைப்பொருள் மீதான தேசிய அவசரநிலை முடியும் வரை புதிய வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவிற்கான தனது ஏற்றுமதிக்கான 25 சதவீத வரி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவுக்கு அதே வரியும், சீனாவுக்கு 10% வரியும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் புதிய வரிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

புதிய வரிகள் அமெரிக்கக் குடும்பங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தும் அதிபர் டிரம்ப் அதை அமல்படுத்தியுள்ளார்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan