SIT பல்கலைக்கழகத்தின் பொங்கோல் வளாகம் செப்டம்பர் 2 முதல் செயல்பட தொடங்கும்…!!

SIT பல்கலைக்கழகத்தின் பொங்கோல் வளாகம் செப்டம்பர் 2 முதல் செயல்பட தொடங்கும்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (SIT) பொங்கோல் வளாகம் அடுத்த மாதம் முதல் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏறக்குறைய 3,800 மாணவர்கள் புதிய வளாகத்தில் தங்கள் கல்வியாண்டைத் தொடங்குவார்கள்.

பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மட்டுமே தற்போது திறக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழுமையாக செயல்பட உள்ள பல்கலைக்கழகத்தில் சுமார் 6,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளாகம் அறிவார்ந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்பட்டுள்ளது.

SIT இன் Punggol வளாகம், அதன் 27 இன்ஃபோகாம் தொழில்நுட்ப ஆய்வகங்கள், தன்னாட்சி வாகன ஆய்வுக்கூடம் மற்றும் வளாகத்திலிருந்து நிஜ உலகத் தரவைச் சேகரிக்கும் மெய்நிகர் தரவுத் தளத்துடன், டிஜிட்டல் திறன்களை வளர்ப்பதில் மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளது.

கூடுதலாக, SIT இல் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பட்டப்படிப்புகளைப் படிக்கும் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான Temasek இன் உதவித்தொகை வழங்கப்படும் என்று SIT ஆகஸ்ட் 24 அன்று கூறியது.

பல்கலைக்கழகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம் இந்த ஆண்டு இறுதியில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.