சிங்கப்பூரில் காணாமல் போன டாக்ஸியை 7 மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை…!!!

சிங்கப்பூரில் காணாமல் போன டாக்ஸியை 7 மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டாக்சியை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் சந்தேகநபர் மீது இன்று
(செப்டம்பர் 14) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

செப்டம்பர் 13 பிற்பகல் 2.45 மணியளவில் ஜலான் ராஜா எனும் இடத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட டாக்ஸி டிரைவர், டாக்ஸியை பூட்டாமல் ஹோட்டலில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அவர் 5 நிமிடம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது டாக்சியை காணவில்லை.

போலீசார் விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தகவல கிடைத்த 7 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை அடையாளம் கண்டு அதிகாரிகள் கைது செய்தனர்.

காணாமல் போன டாக்ஸியும் அன்றே மீட்கப்பட்டது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.