வேலை முடிந்த பிறகு துப்பாக்கியை கொடுக்க தவறிய காவல்துறை அதிகாரி!!

வேலை முடிந்த பிறகு துப்பாக்கியை கொடுக்க தவறிய காவல்துறை அதிகாரி!!

சிங்கப்பூரில் Bugis+ ஷாப்பிங் சென்டரில் துணை காவல் துறை அதிகாரி வேலை நேரம் முடிந்த பிறகு துப்பாக்கியை கொண்டு சென்றதற்காக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

அவரை கைது செய்தனர்.
அவருடைய வயது 27.அவரிடம் இருந்து துப்பாக்கி மேலும் தடி, தோட்டாக்கள் உள்ளிட்டவைகள் இருந்தன.

அந்த நபர் ஷிப்ட் முடிந்த பிறகு துப்பாக்கி கொண்டு சென்றது குறித்து Certis நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது. வேலை முடிந்த பிறகு அந்த பொருட்களைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதனையடுத்து கேமரா உதவியுடன் விக்டோரியா ஸ்ட்ரீட்டில் காவல்துறை அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த பொருட்களை மீட்டனர். வேறு காரணங்களுக்காக துப்பாக்கி உபயோகப் படுத்தப்படவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்தது.

இதனால் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.


குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் குறைந்தது 6 பிரம்படிகள் வழங்கப்படலாம்.