மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர்களை கைது செய்த காவல்துறை…!!!

மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர்களை கைது செய்த காவல்துறை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து செப்டம்பர் 10 காலை 10.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பிடோக் நார்த் டிரைவில் உள்ள கார்ப்பரேஷன் பிளாக் 222B இன் அடித்தள கார் பார்க்கிங்கில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

இது குறித்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்கப்பட்ட 14 மணி நேரத்திற்குள் போலீசார் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து திருட்டுக்குள்ளான மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் திருடியதாக 16 வயது சிறுவன் மீது நேற்று( செப்டம்பர் 12) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் இதில் சம்பந்தப்பட்ட 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்,அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here ⬇️