சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!!

சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!!

மலேசிய மாநிலமான சபாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் உள்ள சோடோங் சவாரியில் இருந்து இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இரவு 9 மணி அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில் 29 வயதான பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் ஒரு ஆண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஆய்வுகளுக்காக கேளிக்கை பூங்காவின் செயல்பாடுகளை நிறுத்துமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.

மேலும் இயந்திரங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு கண்காட்சி மீண்டும் தொடரலாம் என்று அவர்கள் கூறினர்.